Archive for October 2011
நெல்லூர் டைரிஸ்..
நீ.....ண்ட காலத்திற்கு பின் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெய்வேலி to நெல்லூர் பயணித்தபின் அவ்வுளவாக இணையதளத்தில் நேரத்தை
செலவிடமுடியவில்லை. என்னுடைய
உயர் படிப்பிற்காக வெளியில் சென்று படிக்க ஆயத்தமானபோது ஆந்திராவிலுள்ள 'நாராயணா
கல்வி குழுமங்களை'ப் பற்றி கேள்விப்படநேர்ந்தது. ஒரு புது அனுபவத்திற்காகவும்
சவாலாகவும் நெல்லூரிலுள்ள நாராயணா கிளையில்
சேர்ந்தேன். ஆங்கிலத்தை தவிர வேற்று
மொழிகள் பேசத்தெரியாத எனக்கும்
தெலுங்கை தவிர வேற்று மொழிகள் பேசாத ஆந்திர
மாணவர்களுக்கிடையே இருந்த நட்பின் மூலம் நான் அங்கு கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் பட்டறிந்த
அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறேன். எனவே வரும்
வாரங்களில் அவைகளை தொகுத்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி///